Search This Blog

Friday, October 27, 2017

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி   

நூலாசிரியர்:  
வள்ளல் பெருமானின் மாணவர் 
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'   
அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" 



பாயிரம்

முதற்பத்து

இரண்டாம் பத்து

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம் பத்து

ஆறாம் பத்து

ஏழாம் பத்து

எட்டாம் பத்து

ஒன்பதாம் பத்து

நிறைவுப் பத்து

அன்பர்களின் வசதிக்காக இன்னூலின் படக்கோப்புவடிவம் (PDF) இங்கு வெளியிடப்படுகின்றது,

பதிவிறக்க இணைப்பு : http://www.vallalarspace.org/AnandhaBharathi/c/V000026699B

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - நிறைவுப் பத்து

                             திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                 (வேறு)

           முத்திநல்கு சித்தசுத்தி முழுதும்வேண்டு நின்னடிப்
           பத்திவேண்டு நினதுசீர்கள் பாடவேண்டு நாயினே
           னித்தஞான சித்திபெற்று நிலவியெங்கு நின்றவா
           வத்தனோடே னன்னையாகு மனகராம லிங்கமே                     ...(91)


           ஏடு சிதைந்துள்ளதால் பாடல் எண் 92 கிடைக்கப் பெற்றிலம்.         ...(92)


           ................................... பத்தியுஞ்
           ..................... வர் சேவடிக்க ணன்புநின்
           .....டைந்த வருணினைந்து பாடுபரிசும் வேண்டுமான்
           .....வேர்க ளைந்தஞான மோனராம லிங்கமே                      ...(93)


           மோனவீடு கூடுமுன்பு முற்றுணர்வு சேரவும்
           தானெலாஞ்செய் வல்லசித்த சாமிதயவு வாய்க்கவு
           ஞானசித்தியொன்ற வுங்க ணல்கி யாளவேண்டுமா
           லூனமற்ற வாழ்விலோங்கு முசித ராமலிங்கமே                     ...(94)


           உச்சிமீது வைத்தபாத முள்ளநோக்கி நிற்கவும்
           நச்சிஞான வமிர்தமுண்டு நானிறப்பி லாததோர்
           விச்சைதேர்ந்து வாழ்வதற்கும் வேண்டினேனருளுவாய்
           செச்சை சேர்பொன் மேனிகொண்ட சீலராமலிங்கமே                  ...(95)


           சீலமிக்க சேவைதந்த செயல்கள்போற்றி ஞானமா 
           மோலிபூண்ட சென்னிபோற்றி முளரித்தாள்கள் போற்றியென் 
           பாலிரங்கு கருணைபூத்த பதுமவதனம் போற்றிகல்
           லாலமர்ந்த வடிகளான வதுல ராமலிங்கமே                         ...(96)


           அதுலஞான மெய்தநோக்கு மங்கணாள போற்றியுள்
           விதலைதீர வருள்வழங்கு மெய்த்தவத்த போற்றிபொன் 
           மதலையானை யேத்திமகிழ்செவ் வாயபோற்றி போற்றிநீள்
           மிதுலையாளி நேருஞான வீரராமலிங்கமே                          ...(97)


           வீரஞான வேழமாம்வி வேகபோற்றி மழையினு
           தாரபோற்றி மூவிரண்டு தமிழ்நயங்கொ டிருமுறை
           வாரமோடு வாய்மலர்ந்த வள்ளல்போற்றி யஞ்சுறாத்
           தீரபோற்றி போற்றியெங்க டேவராமலிங்கமே                        ...(98)


          தேவருண்ணு மமிழ்தின்மிக்......................
          பாவழங்கு சுத்தஞான பா........................
          காவழங்கல் போல்வழங்........................
          னாவலோர்ப லோர்வணங்கு ந....................                  ...(99)

          குறிப்பு:  ....... என்ற இடங்களில் ஏடு சிதைந்துள்ளது.


          நாத வாழியெம்மை யாளுநம்ப வாழியெ........
          போத வாழிஞான சித்திபுரநிவாச வாழிநன் 
          னீத வாழிராமலிங்க நிமலவாழி யன்பராஞ்
          சேத னர்கண்மகிழ வூர்வைதீகத் தேர வாழியே                       ...(100)
          
          குறிப்பு:  ....... என்ற இடங்களில் ஏடு சிதைந்துள்ளது.


                                          (முற்றிற்று)

                  திருவருட் பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க.          

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஒன்பதாம் பத்து


திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                          (வேறு)

           வந்தா யுருக்கொண்டு தமியேனை வாழ்விக்க வன்றோரிரா
           முந்தா சனத்தே யிருந்தாயொண் மலர்நேர் முகங்காட்டினா
           யெந்தாதை யேராம லிங்காநி னருள்வண்மை யென்சொல்லுவேன்
           சிந்தா மணிச்சேவை சிந்தாகுலத்தைச் சிதைத்திட்டதே              ...(81)


           சிதையாத வொளியானதிருமேனி பெற்றுச் சிறந்தோங்குநின்
           இதையார விந்தத்தி லருளன்றியிருளேது மின்றென்பதைச் 
           சுதையாரு மொழியோடு நடைகாட்டு மயலார்கள் சொலவேண்டுமோ
           விதையாசை யறவென்ற குருராமலிங்கைய விமலேசனே           ...(82)


           விமலர்க்கு வடலூ ரருட்சோதிநாதர்க்கு மெய்யன்புசெய்
           முமலச் செருக்கற்ற மாராம லிங்கன்பொன் முளரிப்பதங்
           கமலக்கரங் கூப்பியேத்து ந்திருத்தொண்டர் கட்கிம்மையே
           தமலக்கணங்கண் டருட்பேறு சார்தன்மை தானெய்துமே              ...(83)


           தானென்று மவனென்று மிருதன்மை நாடாது தானந்தமில்
           வானென்று நின்றானை வாராவரத்தாகி வந்தெம்மையாள்
           கோனென்ற குருராம லிங்கந்தனைக்கண்டு கூடுந்தவர் 
           தேனென்ற சித்திக்குமுத்திக்கு மயனாடு செல்லார்களே              ...(84)


                             (வேறு)
           செல்லொன்று மின்போல வ‍‍‍‍‍‍‍........................
           சொல்லொன்று தமிழ்வேட்.........................
           யல்லொன்று மஞ்ஞான நீங்..........................
           இல்லொன்றுமெனையாள வருராமலிங்காவென.........           ...(85)

           குறிப்பு: ...... என்ற இடத்தில் ஏடு சிதையப்பெற்றுள்ளது.


           இதயார விந்தத்தை யலர்விக்க வெழுஞான வாதித்தன்
           சிதையாவுனருள்கொண்டு சிறியேனு ளெல்லாந் தெரிந்தின்புற
           மதயானை நெஞ்சத்தினிருணீக்கி யொளியாக்க வரல்வேண்டுமால்
           சுதயாக ராராமலிங்கா வருட்சித்தர் சூழ்தோன்றலே...               ...(86)


           தோன்றாததுணையாக வொளிர்கின்ற நீயெங்க டோன்றுந்துணை
           நான்றா னெனப்பள்ளி தனைநீத் துருக்கொண்டு ஞானந்தருங்
           கோன்றா னெனப்பாரி லுறைவோர் குறிக்கொள்ள வெளிவந்தருள்
           ஏன்றா னினுந்தாழ்த்தலெந்தா யிராமலிங் காசார்யனே                ...(87)


           ஆசாரி யாராம லிங்காவு னடியாரை யாடற்கெனத்
           தேசாருருக் கொண்டுவரவேண்டு மிதுவேளை செகமீதினீ
           பேசாத்திருப்பள்ளி தனைநீக்கிடாயேற் பிணக்கின்றியெம்
           மீசா வருட்சோதி நெறியார்க்கு மொன்றாத லெவ்வண்ணமே          ...(88)


           ஒன்றாம் பரஞ்சோதியொடு கூடியுறைவா யுருக்கொண்டுநீ
           நன்றாக வெளிவந்து சித்தாடலிது காலை ஞாலத்தின்மே
           னின்றார்கள் காணச்செய் வாயேலு னருளாட்சி நிலைநிற்குமால்
           வென்றாடு மாராமலிங்கார்ய வீதென்றன் விண்ணப்பமே               ...(89)


           விண்ணப்ப மொன்றுண்டு தமியேன் மனத்தொன்றும் விழையாதசீர்
           நண்ணப் பணித்தாண்டு கல்லாமையில்லாமை நனிநீக்குவா
           யெண்ணப் படிக்கென்று துதிகூறுமெனையாள விதுவேளைகாண்
           வண்ணப் பரஞ்சோதி சபைகாண வடலூருள் வருமுத்தனே            ...(90)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - எட்டாம் பத்து

                       திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 



                                                   (வேறு)

           கடலினமிர் துண்டார் கடைந்திமையோர் நீமதியா 
           லுலலினமிர் துண்டா யுயர்சொருப சித்திபெற்றாய்
           மடலின்மலர்த் தேன்போற் றிருவருட்பா வாய்மலர்ந்தாய்
           வடலுறையி ராமலிங்க மாமணியே யெண்குணனே               ...(71)

           குணமாய்க் குணியாய்க் குலவுகிற்பாய் பூவின்மது 
           மணமாய் விளங்கியெம்மை வாழ்விக்குங் கோமானீ
           கணமாய்த்திகழு மொரு காலபர மேலாமந்
           தணமா மிராமலிங்க சற்குருநின் சேவைநல்கே                   ...(72)

           சேவையெனக் கீந்தே திமிரமல நீக்கியியற்
           பாவையுன தாட்புனைந்தென் பாற்கருணை வைத்தருள்வாய்
           தேவையிடத் தோங்கு மிராமலிங்கத் தேவெனநீள் 
           பூவைமிகச் சீர்திருத்தப் போந்தகுரு புங்கவனே                   ...(73)

           புங்கவர்போன் மன்னுயிர்பாற் பொன்றாப் பெருந்தயவு 
           தங்கவளர் காருணிய சாகரமா நீதழைத்தாய்
           துங்கநிறை ஞானவருட் சோதியுருக் கொண்டொளிரும் 
           மங்களவி ராமலிங்க மணிநின்சீர் வாழியவே                     ...(74)

           வேதா கமம் புகலு மெய்ப்பொருளை யாறந்த 
           மீதா கியசிவத்தை மேவியருட் சித்திபெற்ற 
           நாதா விராமலிங்க நம்பா வுனையடைந்தே 
           னீதா வெனைத்திருத்தி யாண்டருள்வாய் நின்னடிக்கே             ...(75)

           அடித்தா மரைமலரை யன்பதனாற் பற்றிநின்றேன்
           பிடித்தா யெனைநீநின் பேரருளாற் பெம்மானே
           பொடித்தான் புனைந்தொளிரும் பொன்மேனி ராமலிங்கா
           முடித்தாளெ னெண்ணமென முன்னியுனைத் தொழுவேனே         ...(76)

           வேனில்வேண் மால்கூர்பொன் மேனியுறுங் கட்டழகா
           நானின்மே லிச்சைகொண்டே னாதா வெனைப்பிடித்தாய்
           வானின்மே லிச்சையற்றேன் வள்ளலிராமலிங்கா
           தேனின்மே லாஞான சித்திநெறி தெரித்தருளே                    ...(77)

           ஏடு சிதையப்பெற்றுள்ளதால் பாடல் எண் 78 கிடைக்கப்பெடற்றிலம். (78)

           ..............................................................சாத  மோனபத
           ...................................ட்டு மிராமலிங்க மெய்க்குருவே
           .......................நீக்கு மொளிவடிவோ யுன்னொடுநான்
           ................றனைத்து மில்லா விளக்கமுறச் செய்தருளே  (79) 
           குறிப்பு: .....என்ற இடத்தில் ஏடு சிதைந்துள்ளது.

           செய்வா யடுத்தார் திருந்தும்வகை யெல்லாநீ
           பெய்வாய் முகில்போற் பெருங்கருணை மாரிநின்போ
           லுய்வாழ் வெனக்கருள்வா யொப்பி லிராமலிங்கச்
           சைவாநற் சைவந் தனைவளர்க்க வந்தோனே                      ...(80)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஏழாம் பத்து

                                       
திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                                             (வேறு)

                       ஆரணஞ்சொனெறியே வளர்க்கவுன தருளையே பெரிது நாடுவேன்
                           அது குறித்துனது பாததாமரையி லணியுமாறுதமிழ் பாடுவேன்
                       பாரடங்கலு நிறைந்தசோதியது பரமெனுந்தெளிவு மேவியே
                           பல்லுயிர்த்திரளு மொன்றை நோக்கிவழி பாடுசெய்து மதபேதமாம்
                       போரகற்றிமகிழ் வுற்றபேதமொடு பொருவிலாதவொரு தாதைநேர் 
                           புதல்வர்போன்மருவிவாழும்வண்ணமிகுபுனிதநின்வருகையுன்னுவேன்
                       காரணக்குருவி னீவெளிப்படுமொர் காலமென்றது புகன்றிடாய்
                           கருணை தங்கியவி ராமலிங்ககுரு கனகவிம்பநிகர் துங்கனே     ...(61) 


                       துங்கமேவுசிவ சோதி யேதுரியசோதி யேகமெனு முணர்வினாற்
                          றுவிதமற்ற பெரி யோருளத்திலகு சுந்தரக்குரிசி னீயென 
                       வங்கணீருலகி லாரணம்புகலு மந்த மாறுமொரு சமரச 
                          மாகுமென்றுணர்வி லணுபவத்திலுண ரறிஞர் கூடியசன்மார்க்க நற்
                       சங்கமொன்றினை வளர்த்த தோர்தலைமை சாரு மாசிரிய னாகினாய்
                          தத்து வத்தலைவர் பலம தத்தலைவர் தாம தித்திடவிந் நாளிலே
                       எங்க ளுக்கனைய சமர சங்குலவுமினிய ஞானசபை நேர்திகாண்
                          இராமலைம்புல னெலாமடங்கவெ லிராமலிங்ககுரு நாதனே      ...(62)  


                       நாத தத்துவ முடித்தலத்தினட னம்பு ரிந்திலரு தூயதோர்
                          ஞான நாடகர்பொ னம்பலத் திறைவர் ஞாலமுய்யவடலூருளே
                       யாதரத்தினொடு தாமெழுந்தருளுமாறு சிற்சபை யமைத்துளா
                          யன்ன தோர்சபையி லவரெழுந்தருள வவருடன் றொடருநேயமார் 
                       மாத வப்பெரிய ரோடுநீயும்வரு மாட்சிமைக்குரிய காட்சியிம்
                          மகியி லித்தருண நடைபெறிற் கருணைவள்ளலேயுனையெல் லோருமே
                       யேத மற்றகுரு வென்ப ரின்னசெய லெந்த நாணிகழுமோ சொலா 
                          யிராம லஞ்சுமல நிராமயங்குலவு மிராமலிங்ககுரு மூர்த்தியே    ...(63)

                       மூர்த்த மத்தனையு முனது சுத்தவருண் மூர்த்தமென்று தொழுமன்புநம்
                          முதல்வர்கொண்டருளுமூர்த்தமேயுனது மூர்த்தமென் றுணர்விவேகமும்
                       போர்த்தமூலவிருள் கெடவு னதடிகள்போற்றி வெல்லுநல தீரமும்
                          புலையி னோடுகொலை நிகழ்த ராமலருள் புரிகொ லாவிரத மாட்சியுஞ்
                       சீர்த்த தேகமிசைமுத்தி யின்கணுயர் சித்திபெற்றொளிர் விசேடமும் 
                          சித்தர் முத்தர்தம தருளினுக்குரிய  சிறிய னென்றெனையு மேற்றிடக்
                       கூர்த்த நின்கருணை நோக்குமென்புடைகுலாவ வைத்தருள வேண்டுமால்
                          கொண்டனேர்தருமிராம லிங்ககுரு குன்றின்மேலிலகு தீபமே      ...(64)

                       தீப மொத்திலகு ஞானதேகமது தெரிதராதுடை யுடுத்துநீ
                          திரையினுட்குலவு சிவமெனப்பெரியர் சித்தர்கைதொழ வுலாவினாய்
                       கோபமற்றகரு ணாக ரக்கடவுள் கொள்கை யீதென வுணர்த்தியே 
                          குவலயத்துனை யடுத்தமாந்தர்புலை கொலைசெயாவகை விலக்கினாய்
                       தாபமார்சனன மரண நோய்முதல சங்க டங்கள்கெடு மாறுநற்
                          றயவி னோடுசெயு மன்ன தானநிகர் தானமின்றென விளக்கினாய்
                       நீபமாலைபுனை முருகவேளருளுநிமல ஞானமது பெற்றவா 
                          நிலவு மெய்ப்புக ழிராமலிங்கனெனு நிதனேயருள் விநோதனே     ...(65)


                       அருண்மொழிப்பெருமையுலகெலாமுணரெனரிய பாப்பொருள்விரித்தனை
                          யவ்விருத்தியுரை யுலகெனுஞ்சொலள வமைவதாயினது கண்டபேர்
                       பொருள்செய் நுண்ணறிவு பெற்றிலார்தமது போதமேற்படுத னோக்கியே
                          போற்றுவார்சிலர் பொறாமை யாலிகழ்வர்புகழ் வினோடிகழ்வுநாடிலா 
                       யிருண்மலத்தடையி னீங்கிவாழ்பெரிய ரிட்டமேவியவி சிட்டனே
                          யினிய நெஞ்சறி வுறுத்தலாலரனை யெய்துசாதனம் விளக்கினாய்
                       மருள கற்றியவ ருட்ப்ர காசனெனும் வள்ளலாகுமொரு தெள்ளியோய்
                          மாதவக்குருவிராம லிங்கமென மண்ணுளோர்புகழு மண்ணலே.    ...(66)


                       அண்ணன் முக்கணர னளவிலாதபுக ழறைய வல்லவருள் வாக்கினி
                           யதிக னென்பர்பலர் தமிழ வாவுடைய வறிஞர்தந்தமுள் வியப்பரால்
                       வண்ண நின்றுதி யடங்கலுந்தமிழின் மதுரமாமது மணக்குமே
                           வாதவூரர்திரு வாசகத்தினிது மனமுருக்கவல தென்பரே
                       யெண்ணலாகுமுயர்  திருநெறித் தமிழினிலகு சாரமெனலமையுமே
                           எந்தை நீகுரவர் நால்வர் மீதுபக ரின்றமிழ்க்கெவர் வணங்கிடார் 
                       கண்ணி னாலிரவி மதிநலம்பெரிது காட்டிநின்றகரு ணாகரா
                           கானி லங்குவடலூருண் ஞானசபை கண்டமாதவம கத்வனே.     ...(67)

                       
                       மகத்துவம்பெருகு ஞானசித்திபுர மன்னு சிற்சபையு ணாதனார்
                           மாசிலாதசிவ சோதிபாதமலர் வனையு நின்றுதி யடங்கலுஞ்
                       சகத்து வந்துலவியந்த மாறுமுறு சமர சந்தனை யுணர்த்தியே
                           தமிழினின்பினையுநன்குகாட்டுமொருதன்மைவாய்ந்துமிளிர்சீர்மையால்
                       அகத்து நாடுமவர் தமைவசிப்பதென வதனை யோதுநரு மாயினார்
                           அன்னவாறுதமிழ் பாடவும் பழகுமறிவுடைக்கவிஞர் கற்பரான்
                       மிகுத்த நின்பெருமை பேசுநின்பனுவல் வேறு கூறுநரும் வேண்டுமோ
                           விண்மணிக்கிணை யிராமலிங்கமென மேதையோர்கள்பகர்போதனே...(68)


           மேதையோர்கருது போதபானுநிகர் புண்ணியக்கருணை வள்ளனின் 
                புதுமலர்க்கமல பாத மீதடிமை புனைதருந்தமி ழுவத்தியோ
           பாதகக்கொடிய னேனை யுன்றனது பணிசெயும்படி வசிப்பதென்
                பவமெலாமறவுய் விக்கநாடியதொர் பரிவுகாட்டினைகொ லுணர்கிலேன்
           பூதலத்தவர் வியக்க நீவருமொர் போது கண்டுனடி யார்குழாம்
                புக்கு மிக்கொளிர வார்வமேவியது புனிதநின்னுள மறிந்ததே
           ஆதலாலெளிய ரேங்களுக்கருள வண்ண்லேவருதல் வேண்டுமால்
                அமல சர்குருவி ராமலிங்கமென வறையுநேயர்கள்ச காயனே ...(69) 


           காயமீ துமிகு மாயமாகும்வரு காலனார்கவரு முன்புசா
               காத கல்விபெற வேண்டுமென்றறிஞர் கட்கு மாசிலுரை பேசினாய்
           தூய வித்தையது தேருபாயமெவர் சொல்ல வல்லர்சக மீதிலே 
               துணையெமக்குனது கருணையென்றுனடி தொழுதுவாழ்த்துமெமை யா
           ஞேய ஞாதுருவு ஞானமுங்குலவ னீத்தவத்துவித நிலையிலே    [ளுவாய்
               நீக்கமற்றொளிரு மிணையிலாமவுன நிர்க்குணத்தொடுறை மேலவா
           தேயமெங்கணு நிலாவு கின்றதொரு சித்திபெற்றசிவ சித்தனே
               தேசிகோத்தம விராமலிங்கவுயர் சிற்குணக்கடலி னமுதமே    ...(70)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஆறாம் பத்து


திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 


                                                       (வேறு)
                               (தனன தானதன தானதந்தனா)

                            அசை விலாதவயி ராக மொன்றிலே
                                னகில வாழ்விலக மாலொ ழிந்திலேன்
                            வசையி னீதிநெறி யேநடந்திலேன்
                                மறம தேபுரிய நாளுமஞ்சிலேன்,
                            கசிதலே துமறியேனு ளன்புதீர்
                                கடையனே னுமுயு மாறிரங்குமோ
                            இசைதவாதவடன் ஞான மன்று வாழ்
                                இறைவ ராவொளிரிராம லிங்கமே        ...          ...(51)

                               (தான தனத்தன தான தய்யனா)

                            மேனி மினுக்கிய மாதரல்குல்வீழ்
                               வேனை யுனக்கினி  தாளவல்லை நீ
                            ஞான நெறிக்கிசை யாத புல்லனே 
                               னாடு மருட்பிர சாத நல்குவாய்
                            பானு நடுத்திகழ் சோதி மெய்யனே
                               பாச மறுத்தவர் மேவு துய்யனே 
                            வானை நிகர்த்தருண் மாரிபெய்யுமோர்
                               மாசிலருட்பிர காச வள்ளலே             ...          ...(52)

                               (தனத்தன தானன தான தந்தனா)

                            அருட்பிரகாச விராம லிங்கனார் 
                               அருட்சிவஞான விநோதமைந்தனார்
                            மருட்சுக மாயையி னாடல்வென் றுளார்
                               வடற்சபை மேவிய சோதி நண்பனார்
                            தெருட்பத வாரிச நாடுமென்கணே
                               செழித்த மகேசரெனாவெதிர்ந் துகார்
                            இருட்பிணி தீருப தேச மொன்றுநேர்
                               எழிற்குரு வாயினர் தேர கண்டரே        ...           ...(53)

                              (தந்த தானதன தான தந்தனா)

                            கண்டு போலமொழி யாடு மங்கைமார் 
                               கண்செய் மோகமடையாத சிந்தையார் 
                            தொண்டர் சூழ்குருவிராம லிங்கனார் 
                               சுந்தரானன சரோரு கந்தனோ
                            டண்டு பானுமதி நீர்மை யொன்றிவாழ் 
                               அங்க ணாளரெமை யாளு மன்பனார்
                            கொண்டல் போலவுப காரமிஞ்சினார்
                               குன்றின் மீதிலகுசோதி யென்பரே        ...            ...(54)

                               (தான தாந்தன தான தந்தனா)

                            சோதி வாய்ந்தவிராமலிங்கனார்
                                தூய தாங்கழல் பாடுமன்புளார்
                            கோது தீர்ந்தவராகி யெங்குமே 
                                கோயிலாண்ட மகேசர் பங்கில்வாழ் 
                            மாது போன்றறமே புரிந்துசீர் 
                                வாழ்வு மாந்தர்கள் சாரமுந்துவார்
                            தீதெலாங்களை வார் விளங்குவார்
                                தேவர் வாஞ்சைசெய் பேறடைந்தரோ    ...            ...(55)

                                (தனன தாத்தன தானதந்தனா)

                            அரிய சீர்த்தவ சாதனங்களா
                               லருளி னாட்டமொடேமுயன்றிலேன்
                            பிரியமாய்ச்சக காரியங்களே
                               பெருகும் வேட்கையறாத சிந்தையேன்
                            துரிய மேற்கிளர் சோதியின்பு தோய் 
                               சொருப மாட்சியிராம லிங்கனார்
                            கிரியை நீக்கிய ஞானமென்கணே
                               கிளரவேயருள் வார்கொ லன்பினே       ...             ...(56)

                               (தந்த தன்னன தான தந்தனா)

                            அன்பு பின்னிய தான சிந்தையா 
                                ரஞ்ச லென்னுமி ராமலிங்கனார்
                            இன்பு மன்னிய வாழ்வு கொண்டுளா
                                ரெங்க ளன்னை பிதாநி கர்ந்துளார்
                            வன்பில் பொன்னுடலோடி லங்குவார்
                                மன்று ளின்னட நாய கன்றிரு 
                            முன்பு துன்னிருவோரி னின் றுளார் 
                                முண்டகன்முதலோரு மொஞ்சவே      ...             ...(57)

                                (தந்தனா தனதான தந்தனா தந்தனா)

                            ஒஞ்சியே மடமாதி னண்பலார் முன்புபோ
                                யொன்றுமே குறையோதி நின்றிலே னுன்கணே
                            யஞ்சிடேன் முறையோத நின்றுளே னின்றுநா
                                னங்கனா குரு ராமலிங்கமே வந்துகா 
                            வஞ்சமாகிய மாயை யின்பொலா விம்பமா 
                                மைந்துசேர் மனமா லடங்குநாளென்றதோ
                            தஞ்சநீ யெனையாளமுந்துவாய் முந்துவாய் 
                                சங்கரா வடலூருண் மன்றுவாழ் தந்தையே...           ...(58)

                                (தந்தனா தானனா தனதான தந்தனா)

                            தந்தைநீ தாயுநீ குருராமலிங்கமே 
                               சங்கையே தீருமாறெனையாளமுந்தினாய்
                            மைந்தனா னாகினே னிசைபாடு மன்பினான்
                               மங்களா காரமா முனதாள் வணங்குவேன்
                            சொந்தனீயாகினாய் துணையாக நின்றுளாய்
                               துங்கமார்வாழ்வுசேர் சிவபோகவின்பமே 
                            யெந்தநாளீகுவாய் வடலூ ரமர்ந்தவா 
                               வென்றுளோர் சோதிபோல் விளையாட கண்டனே.         ...(59)

                               (தனதான தந்த தனதான தந்தனா)

                            விளையாட வந்த பரஞான சித்தனார்
                                விதியாதியும்பர் பணிபேறு பெற்றுளார்
                            சளையாத விந்து தனிலே யுதித்ததோர்
                                சககோடி யெங்குமொளிரா தவத்தினார் 
                            கொளையாடுகின்ற கொடுநோய் மருத் தனார் 
                                குருராம லிங்கர் சரணாம் வழுத்துவோம்
                            இளையாமனின்று தவமே யியற்றுவோ
                                மெழிலாரணஞ்சொ னெறியே வளர்ப்பமே.                ...(60)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஐந்தாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
                          


                                                   (வேறு)

           அறிவினையறிந்தாயாங்கே யறிவினுக்கறிவு தன்னைப்
           பிறிவினை யின்றிக்கூடிப்பேரொளி விளக்கம் பெற்றாய் 
           செறிவினை யிலாத ஞான சித்தராமலிங்க நீநல்
           லுறவென வுளப்பூங்கோயி லுனைநீறி இத் துதிக்கின்றேனே          ...(41)

           துதிக்கெனை யியக்குஞான சொரூபனா மிராமலிங்கன்
           மதிக்கொரு விளக்காநின்றான் மலவிருள் விலகச்செய்வான்
           விதிக்குநானஞ்சவையான் வேட்கைதீர் விமலமுத்திப்
           பதிக்குநற்றுணையுமாவான் பானுமண்டலத்தினானே  ...            ...(42)

           பானுமண்டலத்தோர் ஞான பானுவாம்பர்க்க மூர்த்தி
           தானென நமையாள்கின்ற சற்குரு ராமலிங்கக்
           கோனுயர் சித்திமூன்றுங் குலவநம் பால்வழங்கு 
           வானென மதித்து நெஞ்சே வணங்குது மவன்றாட்போதே             ...(43)

           போது வீண் போதராமற் புண்ணிய னிராமலிங்கக்
           கோதுதீர் ஞானமூர்த்தி குரைகழற் கமலம்பாடி
           யோதுமெண் சித்திமுத்தி யொன்றிவாழ்ந்திடலாநெஞ்சே
           யீதுநீ விழைந்தாயெண்ணி லிறைபணி புரிகுவாயே ....             ...(44)

           இறைபணி செயமலங்க ளிரிந்திடு மெனுமெய்ஞ்ஞான
           மறைமொழி யுணர்ந்த நெஞ்சே வருதிநம் வடலூராளி
           குறையறு மிராமலிங்க குருநமைக் குறிக்கொண்டாளத்
           திறைசெலுத்துதல்போ லன்னான் சேவடி பாடலாமே                 ...(45)

           பாடல மாலை போலப் பாடல மாலை சாத்தி
           நாடல கிலாத சுத்த ஞானநம் பாலதாக 
           வாடல மாகியின்ப வாழ்வுற விராமலிங்கர்
           தாடலை வைத்து நெஞ்சே தருக்கறத்துதித்து நாமே ...              ...(46)

           நாமெனு மகந்தை தீர நஞ்செய லவனதாகப்
           பாமர நீங்கஞானப் படிவமுற்றருள் விலாசத்
           தோமறு வடலூர்மேய தொல்லருட் பெருஞ்சோதிக்குட்
           போமள விராமலிங்கன் பொன்னடி புகழுவோமே ...                 ...(47)

           புகழுவோமிராமலிங்கன் பொன்னடி வணங்கு கிற்போ
           மிகழுவோஞ் சனனவல்ல லின்னருட்டுணையினாலே
           யகழுவோ மாணவத்தை யருட்பெருஞ் சோதிக்குள்ளே
           திகழுவோ ஞானானந்தத் தேனினைப் பருகுவோமே ...              ...(48)

           பருகுமின் னமுதமொப்பான் பளகிலா விராம லிங்கன்
           தருகுவ னிதுநாள் காறுந் தராதபே றெய்தும் வண்ணம் 
           வருகுவென் புவிவாழ்விக்க வாய்மையீ துணரென்பான்போ
           லுருகுமென்னிடத்துவந்தா னுரைத்தசொற் பணிகொண்டானே ...      ...(49)

           கொண்டல்வந்துறங்குஞ் சோலைக் குளிர்நிழல் வடலூர்மேய 
           வண்டர்க ணாத னெம்மானருட்பெருஞ் சோதிக்காளாய்த்
           தொண்டது செய்யப்பெற்றேன் றூயவ னிராமலிங்கன்
           பண்டைநற் றவத்தாலென்னைப் பற்றிநின் றசைத்தலானே  ...        ...(50)         

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - நான்காம் பத்து

                                திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************

                                                 (வேறு)


             ஆரூரன் பசிநீங்கக்கச்சூர்க்கோயி
             லரனார்முன் சோறூட்டிக்காத்ததே போற்
             றேரூருந் திருவீதியொற்றியூரிற்
             றியாகேசர் நின்பசிகண் டிரங்கியோர்நாள்
             காரூருநள்ளிரவி லன்ன மூட்டிக்
             களைமாற்றித் தாய்நீர்மை காட்டி னாரே
             னீரூருஞ் சடைமுடியா ரிராமலிங்க 
             நெடுந்தகைநின் றொண்டுவந்தாரென்னலாமே.    ...             ...(31)

             என்னிசைப்பே னின்மகிமை வடலூர்தன்னி
             லெந்தாய்நீ மோனபதம் புகுந்தபின்னர் 
             நின்னதுசந் நிதிகண்டுபுதல்வர்சூழ 
             நேயமொடுதிரும்பியதோர் மடவாளாங்கே
             மன்னியதோர் நதிநீத்தங் கடக்கமாட்டாள்
             வருந்திநிற்க வெதிர்போந்துநீத்தந்தானே
             நன்னர்வழி விடப்பணித்துக் கடத்திக் காத்தாய்
             நற்றுணைவா விராமலிங்கச் சித்தர் கோவே   ...                ...(32)

             சித்தர்சிகா மணியேயி ராம லிங்க 
             தேசிகனே நின்கருணைக்கெல்லையுண்டோ
             வித்தகநின்னடியானோர் வணிகன் கானில்
             விடநாகந் தொடவரல்கண் டுன்மே லாணை
             வைத்தகலமுப்பகலங் கதுசெல்லாமல்
             வருந்திநிற்கும் பரிசினைமுற் றுணர்விற்கண்டே
             பத்தன்வரப் பணித்தாணை விடுவித்தாங்கே
             பணிசெலவிட்டமுதுண்டாய் நின்னேராரே    ...                  ...(33)

             நின்னருட் சீர்பாடியவே லாயுதப்பேர்
             நிபுணனுடல் வீங்கியவெம் பாண்டுநோயாற்
             பன்னரிய துயர்மேவிப்பண்டிதத்தாற்
             பலன்காணானின்கோயில் வாயிற்பள்ளி
             துன்னினனாய்க் கிடந்தழல்கண் டவனாகத்தைத்
             தூயதிரு மலர்க்கரத்தாற்பரிசித்தன்னான்
             இன்னுயிர்கா த்தனைராம லிங்கத்தேவே
             யென்னிசைப்பே னின்சித்தின் பெருமையானே  ...                ...(34)

             யானாரெங் கோனாரென் றறியாதேனை
             யினிதாளு மிராமலிங்கமணியே நீதான்
             மேனாளோர் பிரமவிராக் கதனாற்றுன்ப 
             மேவியவந் தணனின்பால் வருமுனோக்கி
             யானாதங் கமரடியார்க்கறிவித்தன்னா
             னணைபோதிலவணிருக்கப் பணிமினென்றே
             தானாகத் தனியிருந்தன் னவனைக்கூவித்
             தரிசனந்தந் திடரொழித்தாய் கருணையென்னே ...                ...(35)

            கருணைநெடுங் கடலேயிராம லிங்கக்
            கண்மணியேயடியர்புடைசூழச்சென்றோர்
            தருணமொரு பதிக்கேகியாமந்தன்னிற்
            சயனித்த புறந்திண்ணைசேரோர் வீட்டில் 
            இரணமனந் தளர்ந்து குன்மநோயான் மாழ்கோ
            ரிரெட்டி யழுங்குரலொலிகேட் டில்லத்துட்போய்ப்
            பருணிதர் மெச்சிடத்துளசிக் குடிநீ ருண்ணப்
            பணித்திடர்நீக் கினைதன்வந் திரிநீபோலும்  ...                   ...(36)

            திரியாத மனத்தன்ப னோர்வேளாளன்
            றிகழ்கூட லூருறைவான்றன்னோர்மைந்தன்
            தரியாத சுரப்பிணியா லிறுதிசாருந்
            தருணமுற நினைநாடியீன்றோ ரேத்தப்
            பிரியாத பெருஞ்சபையோர் கேட்கஞானம்
            பேசுங்காலுணர்ந்து சித்தொன்றாடிக்காத்தாய்
            கரியானா யெவ்வுயிர்க்குமிராமலிங்கக்
            கண்மணி நின்பெருமையவன் விளம்பினானே ...                 ...(37)

            விளம்புபல சித்துவிளையாடல் செய்தாய்
            வித்தகரா மலிங்ககுரு மணியே புன்செய்
            வளம்புனைசிற் றூர் மேட்டுக் குப்பந்தன்னில் 
            வசித்திடுநா ளங்கணைந்தோர் சித்தனாக 
            தளம்பல தீ யிடைவைத்தா டகஞ்செய்தீந்தான்
            தன்புடை சூழ்ந்தவர்க்கெனல்கேட்டவனைக்கூவி
            இளம்பிளை செய் யேலிதெ ன்றாய் மீட்டுஞ்செய்தான்
            இருந்தைகண்டான் கருங்குழியாரிசைப்பா ரீதே.  ...              ...(38)

            ஈதொன்றோ பலவென்பார் நின்சித்தாட 
            லினிதுணர்ந்தோர் கேட்பவருக் கிராமலிங்க 
            மூதுணர்வோய் முழுப்புலவோயென்னான்சொல்வேன்
            மூதுதவ நீ யாற்றிய நாட்சாலை தன்னில் 
            ஆதுலருக்கமுதிலையன்றடுத்தோர் கூற
            வகங்கசிந்து சிவத்தினையோர் பதிகம்பாடிப்
            பாதமலர் துதித்தனைதண் டுலம்பல்பாண்டில்
            பலபதி நின்றடைந்தன கண்டார்பல்லோரே   ...                  ...(39)


            பல்குணத்துப்பன்மாந்தர் தமக்குங்கால
            பயநீங்க நயம்படுசொல்லாலிறனந்தோர் 
            சில்கணத்திற்றம் முயிர்பெற்றெழவே செய்யுஞ்
            சித்தகுரு வருதருண மிதுவே யென்றாய்
            நல்குணவுண் டாங்கிருந்தார் நேயர்ஞான 
            நலமறியாரிகழ்ந் தொழிந்தாரிராமலிங்கத்
            தொல்குருவே யினையவருள் விளையாட்டென்று
            தொடங்குவதோ தெளியும் வணமறிவிப்பாயே ...                 ...(40)

திருவருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - மூன்றாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************



(வேறு)
             மாதர் மையலற் றில்லற வாழ்வினை யொறுத்து
             வேத மோது மெய்ப் பொருளினை வேட்டுளத்துறவே 
             போது மென்றுசொற் றொண்டொடு மாதவம் புரிந்த 
             நீத ராமலிங் காரிய நின்னடி சரணம்...                          ...(21)

             சரணஞ் சார்ந்தவர்க் கிரங்குநற் றயவுசா லந்தக்
             கரண மேயரா மலிங்கர்தாட் கமலமே சனன 
             மரண நீங்கவென் சென்னிமேல் வைகியஞ் ஞானா
             வரணம் பேர்த்தலின் மவுனவான் சுகமரு விடுமே ...             ...(22)

             மருவு நின்னருட் பாவினில் வருமுதல் வெண்பாத் 
             தெரிவ ருங்கதி தெரிக்குநூன் முழுவதுந் தேர்வோர்
             குரவ ராயுலகோர்குறிக் கொள்ளவாழ்குவரேற்
             பொருவி லாதரா மலிங்கநின்புகழ்கண்டார் புகல்வார் ...           ...(23)

             வார மோங்குநின் றிருவருட் பாவினுள் வழுத்து
             நாரி பாகனார் திருவடிப் புகழ்ச்சிதேர் நலத்தோர்
             ஆரி யத்திரு மறைப்பொரு ளறிந்துய்கு வாரேல்
             யார ளந்தறி குவரிரா மலிங்கநின் னிசையே ...                  ...(24)

             இசையி னோடிய னாடகத் தமிழ்வடக் கெல்லை
             யசல வேங்கடம் போன்றுதண் டணிகைவே ளாருளா
             னசையு றாதமெய்ஞ் ஞானசம் பத்தெலா நண்ணு
             நிசசொ  ரூபரா மலிங்கமென் வாழ்முத னிதியே ...              ...(25)

             நிதியு மீகுவ னிடமுடனேவலு நேர்வன்
             கதியு மீகுவன் கற்பவை கற்றவ ரவையிற்
             பதியு மாகவைத் தருளுவன் றன்பதம் பரவும்
             விதியு ளார்க்கிரா மலிங்கவே ளென்பர்மே லவரே ...             ...(26)

             மேலு லாஞ்சித்தர் மதித்திடச் சித்தெலாம் விளங்கிக்
             கால மூன்றையுங் கருத்தினுட் கண்டுவாழ் நினைக்கல்
             லாலின் கீழமர் தக்ஷிணா மூர்த்தியென் றடைந்தேன்
             சீல மேவிரா மலிங்கதே சிகவருள் செய்யே ...                  ...(27)

             செய்யுண் மாலைநின் சேவடி புனைந்திடுஞ் சிறியேன்
             பையு ணீங்கியுய் பாக்கருள் பாலிக்க வேண்டு
             மையுண் கண்ணியர் மாலறவென்றரா மலிங்கத்
             துய்ய னேவடல் வாழ்வெனத் துலங்குகின் றவனே ...            ...(28)

             துலங்கு சீர்வட லருட் பெருஞ் சோதிவாழ் சவையை
             யிலங்கத் தோற்றுவித் தலகில் சித்தாடுவா னெண்ணி
             விலங்கு றாதனற் சமாதியின் மேவுமா தவரா 
             மலிங்க தேசிகா வென்றனை வாழ்விக்க நினையே ...            ...(29)

             நினையு நின்னடித் தாமரை நெஞ்சிடை நிறுவி
             வனையு மென்றமிழ் மாலையைச் சூட்டுபு வணங்கு
             மெனையு நின்றிருத் தொண்டருட் கூட்டுதற் கிசைவா
             யனையு மத்தனு மாமிரா மலிங்கவா ரியனே    ...              ...(30)



திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - இரண்டாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************


வேறு.

வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர் வசத்தனாய் மறனெலா மியற்றி
நாயிலோர் கடைய னாயினே னந்தோ நரகிடை விழாமலென்றனை நீ
தாயிலோர்கருணைகாட்டியாண்டருள்வாய்தமியனேனின்சரணடைந்தேன்
காயிலோர் புகலு மில்லைகாண் வடலூர்க்கத்தரா மலிங்கசற் குருவே.  11

குருபரனெனவே குவலயத் தறிஞர் குறிக்கொளச் சிவநெறி விளக்கி
யொருபர ஞான மெய்தியாறந்த முஞ்சம ரசமெனத்தெரித்தாய்
வருபர வுணர்வில் வயங்குபே ரொளியே மன்னுசீர் வடலுறு மோன
சொருபமே யிராம லிங்கவாரியனே சோர்வற வென்னையாண்டருளே. 12 

என்னையாண் டருளுமெலாம்வல்லசித்தே யெழில்வடன்மேவுசிற்சபையிற்
றன்னையாண் டவனாச்சகத்துளோர் மதிக்கத் தன்னிகர்ஞானநாடகஞ்செய்
மன்னையாண் டேத்தியருட்பெருஞ்சோதிவடிவுபொற்றொளிர்தருங்கோவே
மின்னையாண் டிருக்கு மிடத்திரா மலிங்க விகிர்தனே யுய்யுமாறுரையே. 13

உய்யுமாறுரையா யுன்பத மடுத்தே னுன்புக ழியம்பிடுகின்றேன்
ஐயனே களைக ணீயென நினைத்தே னருட்பெதிஞ் சோதிவாழ் வடலூர்த்
துய்யனே யிராம லிங்கமா மணியே துணைவனேயணை தியென்றிறைஞ்சிப்
பொய்யனே னினையேநம்பினேனென்னைப் புனிதனாச்செயவல்லரசே. 14

வல்லவா வடலூ ரருட்பெருஞ் சோதி வாழ்வினைத் தாழ்வறப்பெற்ற
நல்லவா தூய வருட்பிர காச நற்றவா நினதுசந் நிதிச்சீர்
சொல்லவாக் களித்தராமலிங் காநின்றுணையடி துணையெனப் பிடித்தேன்
பல்லவா வுலகர் மதித்திடவேண்டும் பரிசெலா மீந்தருளெனக்கே.  15

ஈந்தனை யுனையேத் திடுமதியதனா லெனைப்பணி கொண்டனை வடலூர்
வேந்தனி லோங்குமருட்பிர காச வித்தகா வான்மசொ ரூப
மாந்தனி யதுல வான்பொரு ளானா யடியனேற் குறிக்கொளல் வேண்டுஞ்
சாந்தநற் பதமே திகழிரா மலிங்க சற்குரு மாணிக்கமணியே.      16

மாணிக்க வாச கப்பெரு மான்சொன் மலர்த்தமிழ்த் தேனைவாய் மடுத்து
காணிக்கை யாக வருட்பெருஞ் சோதிக்கடவுளைப் புகழ்ந்தபா வலங்கல்
பேணிக்கு நறுஞ்சா றெனவினித் திடநீ பேசினை திருமுறை யாறும்
வாணிக்கு வரம்பா மருட்பிரகாச வள்ளலாய் வயங்குமா தவனே.  17

மாதவச் சித்த சிகாமணி யெனவே வயங்கிய ஞானசற் குருநீ
யாதவற் கிணையா வெனதகத்திருளை யறுத்தது பளிங்கென விளங்க
வோதவத் தைகளையொழித்தெனைக் காட்டியொளிர்ந்தனைவாழியென்னரசே
தீதறு மிராம லிங்கமா மணியே சேதனர் போற்றவாழ் பவனே. 18

பவந்தனை யீட்டிப் பதைத்தபல்பிறப்பும் பயன்பட விம்மையேயெனக்குச்
சிவந்தனை வடல்வா ழருட்பெருஞ் சோதி திருவினை வழங்கவல்லவனீ
யுவந்தனை யெனையுந்தொண்டுகொண்டனையீ துண்மையேலுய்யுமாறருளாய்
தவந்தனை யுலகர் தம்பொருட் டாற்றுந் தனியிரா மலிங்கநாயகனே. 19

இராமலிங் காய நமவெனப்பணிவோ ரிடருறார் நலமெலாம்பெறுவார்
அராமலிந் தாடு சடையனார் வடலூ ரருட்பெருஞ் சோதியாரருளா
னிராமயங் குவல வருட்பெருஞ் சித்து நினைந்தவா றாடுவர் மீட்டும்
வராமலின் பத்தேனுகர்வர்தாமெனவே மதிஞர்சொன்முழுங்குவமாதோ. 20 

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - முதற்பத்து

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************

காப்பு.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

மேகம்போற் கருணைபொழி யருட்பிரகா சப்பெருமான் மிகுதிராட்சைப்
பாகம்போன்மெனவாறு திருமுறைசேர் திருவருட்பாப்பகர்செவ் வாயான்
மோகம்போக் கியராம லிங்ககுரு பரற்கணிவான் மொழியப்புக்க
சோகம்போம் பதிற்றுப்பத் தந்தாதிக் கானைமுகன் றுணைத்தாள்காப்பே.

சித்தர்குல சேகரனி ராமலிங்க தேசிகன்மேற் செவந்திமாலை
சுத்தமுறத் தொடுத்தணியும் பரிசெனச்செந் தமிழ்மொழியாற் றொடுத்துச் சாத்தும்
பத்திவிளை பதிற்றுப்பத் தந்தாதி பாகமுறப் பகர்தற் கன்னேன்
வைத்தருளும் பெருங்கருணை துணையாக வவன்மலர்த்தாள் வணங்கி வாழ்வாம்.

இந்தமிழ்தம்போலினிப்பாள் வெண்பளிங்குபோலுருவாளிசையார்சங்கச்
செந்தமிழ் தந்தொளிர் தருமான் வெண்கமலா சனச்செல்வி திருத்தமாக
நந்தமிழ்தண் கடனிகரும் பேரருள்செய் தெனதுசெந்நா நயந்திருந்தாள்
வந்தமித வருள்பொழியி ராமலிங்கதேசிகன்சீர் வழுத்தத்தானே.

***********************
 நூல்.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

தேருர்ந்த மேருவலன் சூழ்தருமோர் செங்கதிர்போற் றிகழ்ந்து வற்றா
நீரூர்ந்த கடலுலகி லருட்கிரணந் தனைப்பரப்பி நெடியமூலக்
காரூர்ந்த குப்பாய நீக்கியருட் பெருஞ்சோதி காணக்காட்டுந்
தாரூர்ந்த வயங்கெழுதோ ளிராமலிங்க குருவடலூர்ச் சபைகண்டோனே. 1

கண்டாய்நீ வடலுறுசிற் சபையுளருட் பெருஞ்சோதி கண்டபின்னே
கொண்டாய்நீள்மோனபதங்கல்லாலின் புடையமர்ந்தோன்கோலம்பூண்டய்
தண்டாய்நீங்காத்தொழும்பருடனின்றாயெனையுனடித்தண்டேன்மாந்தும்
வண்டாநீர் மையனாகப் பணித்தியருட் பிரகாச வள்ள லானே.  2

வள்ளலாய் வடலூருள் வருவார்க்கு னருளமுதம் வழங்கா நின்றாய்
கொள்ளலாம் பரிபாக மின்மையினாற் பரிந்தேத்திக் கொளமாட்டாம
லெள்ளலா மலத்தழுந்தி மாழாந்தே னெனக்குமெந்தா யிரங்குவாயோ
பொள்ளலா மலவுடல்பொன் னுடலாக்கு மிராமலிங்கப் புனிதத்தேவே.  3

தேவேமெய்ஞ் ஞானவருட்பிரகாச வள்ளலெனத் திகழா நிற்குங்
கோவேயெண் குணமலையே வடலுறுசிற் றம்பலத்துட் குலவுஞானப்
பூவேயப் பூமணமே மணங்கமழ்செந்தேனேநின் பூந்தாட் கென்சொற்
பாவேறத்தொண்டுகொண்டாய்முன்னெதுமா தவம்புரிந்தேன்பாதகனேனே. 4

பதமலரைக்கும்பிடுவோர் குறிக்கொண்டு நாவாரப் பாடாநிற்போர்
நிதமலரைச் சொரிந்திடுவோ ரிதயமலர் மிசையிருத்தி நினையா நிற்போர்
மதமலரை நிகருமகத் தருக்கொழிந்தோர் தரிசிக்க வடலூர் வாயற்
புதமலர வருஞான சித்தசிகா மணியேயொற் புரந்தாள் வாயே.  5

புரப்பாயிச் சிறுநாயேன் றனையெனநின் மலர்ப்பாதம் போற்றா நின்றேன்
இரப்பாருக் கிரங்குநர்போ லெனக்கிரங்கி யருள்புரிய வெண்ணுகண்டாய்
வரப்பாவ லோர்வணங்கத் தக்கவருட் பிரகாச வள்ள லேபுன்
னிரப்பாலெய்த் தவர்க்கருளுங் கற்பகமே யிராமலிங்க நிமலவாழ்வே. 6

வாழ்வனைத்து நின்மலர்க்கட் கடைநோக்கா லன்பர்பெற வழங்கி யன்னார்
தாழ்வனைத்து மவர்பகைவர் தமைச்சாரப் புறம்போக்குந் தயவு ளானீ
சூழ்வனத்து வடலூருட் கதிர்மதிதீ மண்டலத்துட் சோதிபோலூழ்
போழ்வனப்புத் திகழ்தரவாழிராமலிங்கா ரியநின்றாட் புகல்புக்கேனே. 7

புகன்றார்க்குன் சீர்நினைப்பார்க் கருள்காமதேனுவெனப் பொலிந்துளாய்நீ
யிகன்றார்முன்னெனைப்பாதுகாத்தருளும்பெருந்துணை நீ யெனவடைந்தே
னகன்றாழ்ந்தவருட்கடலே வடலுறுசிற்சபைமருவு மருட்சோதிக்கோர்
மகன்றானென் றெணவிளங்கு மிராமலிங்ககுருவேகண் மணியன்னானே. 8

அன்னையொப்பாயத்தனொப்பாயிருநிதியம்போல்வாய்நின்னடியனேற்கோர்
மன்னையொப்பா யுனதுதிரு வடித்துணையே புகலாக வழிபாடாற்று
மென்னையொப்பாருணர்வில்லார் பிறருளரோ வெனையுனருட்கிலக்காவைப்பாய்
பொன்னையொப்பா யருட்பெருஞ்சோதியைப்போற்று மிராமலிங்கப் புலவரேறே.9

புலவர்புகழ் சைவநெறிக் குரவரொரு நால்வர்பதம் போற்றி யன்னார்
நிலவுபெருங் கருணைதனக் கிலக்காகிப் பரம்பரன் சீர்நிகழ்த்தி நின்றாய்
மலவலிநீத் தருள்வலிபெற் றெல்லாஞ்செய் வல்லசித்தாய் வடலூர்வாழுங்
குலவரையே யிராமலிங்க குருமணியே குறைதவிர்த்தாட்கொள்ளு வாயே. 10 

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - பாயிரம் / சாற்றுக்கவி

திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்சோதி துணை

திருவருட் பிரகாச வள்ளலார்
  பதிற்றுப் பத்தந்தாதி.
----------------------------------------
இஃது
ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தலைவரும்
உத்திரஞான சித்திபுரச் சிற்சபை வகுத்தவருமாகிய
திருவருட் பிரகாசவள்ளலார்
சிதம்பரம்
இராமலிங்க சுவாமிகள் மேல்,
--------------------------------------
திரிசிபுரம் ஸ்ரீலஸ்ரீ
மஹாவித்வான் சிந்தாந்த ரத்னாகரம்
அ. வேங்கடசுப்புப்பிள்ளை யவர்களாலியற்றி
-------------------------------------
பெங்களூரில் வணிகர் குலதிலகம்
மேற்படி சுவாமிகள் திருவடிக்கன்பருமாகிய
மஹா-ராஜ-ராஜ-ஸ்ரீ ம. அப்பாசாமி செட்டியாரால்
------------------------------------
பெங்களூர் தண்டு:
நேஷனல் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
பிலவ வருஷம் மாசி மாதம் 3
-----------------------------------
1902
(Copy Right Registered)


====================================================

இஃது
சென்னை வைசியவணிகர் குலப் பெரியதனக்காரரும், திருவொற்றியூர்
அகத்தீசுரர் தேவதான தர்மகர்த்தருமாகிய
ஸ்ரீலஸ்ரீ கோவளம் அப்பாசாமி செட்டியார் இயற்றியது

சிறப்புப்பாயிரம்.

வெண்பா

பொருணயமுஞ் சொன்னயமும் பொற்பு மிகுத் தோங்குந்
தெருணயமுங் காட்டிச் சிறக்கும் - அருணன்
றுதித்தனவி ராமலிங்க வொண்குருமேற் சாற்றும்
பதிற்றுப்பத் தந்தாதி பார்.

---------------------------------
திருச்சிற்றம்பலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

அருட்பெருஞ் சோதி யாந்தனிச் சிவமே
தொருட்பெரு முத்தருஞ் சித்தரும் வியப்புற
உலகின் மன்னுயி ருவப்புற மலவிருள்
விலகிக் கரந்திட விளங்குபவன் மதத்தரும்
சமரசச் சுத்த சன்மார்க்கத்தினை
யமைவுட னுணர்ந்தங் கபேத நலம்பெறத்
திருவருண் மேனி சிறந்துறக் கொண்டு
வெருவற மேதினி மேலவ தரித்தெனச்
செய்தவ மனைத்துந் திரண்டு வந்துற்றென
ஐதருள் விளங்க அவதரித்திட்டவன்
சற்குணக் கடலாய்த் தழைத்ததூயவன்
சிற்குணக் கடலுளந்தெளிந்து படிந்தவன்
தயவலா லொன்றைத் தானறியாதவன்
உயவெலாச் சமயத்துண்மை கண்டுணர்ந்தோன்
ஒழுக்க மென் பனவெலா முள்ளவாறடைந்தோன்
தன்னிளங்காலையிற் சரவணோற்பவனார்
இன்னருளெய்தினோ னிருந்தமிழ்க் குரிசில்
ஒற்றியம்பதியி லுமாபதிதன்னை
நற்றிடம் பெறவே நாடொறுந்துதித்துத்
திருவருள் விளக்கஞ் சிறப்பவாய்ந்தவன்
பொருவருந் தமிழ்நயம் புணர்ந்தநன்மதுரச்
செந்தமிழ் நிதியாந் திருவருட் பாவினைத்
தந்ததயாளன் தன்னிகர் நாவலன்
ஜீவகாருணியத் திறனெலாந்தெரித்தவன்
பாவகாரியக்கொலை பண்ணாதகற்றினோன்
இருட்பிரகாச மிலாவகைமுயன்ற
அருட்பிரகாச வள்ளலாயமர்ந்தவன்
உத்தரஞான சிதம்பரமுஞற்றிச்
சித்திகள் விளையுஞ் சிற்சபைகண்டவன்
பற்பலகாலைப் பத்தர்களுணர்ந்திட
அற்புதம்புரிந்தவ னகண்ட வியாபகச்
சச்சிதானந்தம் தானாய்விளங்கி
நச்சினார்க்கினிய நாயகமானவன்
என்றுலகேத்திடு மிராமலிங்காரியன்
குன்றுறழ் பொற்றோன் குலவுபேரணியெனப்
பதிற்றுப் பத்தந்தாதிப்பெயரிய பனுவலைத்
துதித்துச் சூட்டினன் சுகுணமிக்கவன்
நாற்கவிப்புலமை நண்ணிய நாவலம்
நூற்கடல் வரம்புதேர் நுண்ணறிவுடையோன்
சுத்தசித்தாந்த ரத்தினாகரமெனப்
பெற்றசிறப்புப் பெயரொடு திகழ்வோன்
சிரகிரிதனிலுஞ் சீரான்வாயிற்
புரியினும் வாசம் புரிதரு நலத்தினன்
என்மனக்கினிய வென்னருநண்பன்
தன்மனக்கலைப் பொருள் தமியேற்கீந்தே
இளமையினென்னுட னிருந்தமிழ் பயின்றவன்
உளமலியன்பு சிவத்திடையுய்த்த
தேங்கடமனைய செந்தமிழ் வாக்கின்
வேங்கடசுப்பென விளங்கு நற்சைவன்
அப்புவியமிழ்தெனச் செப்பின்னாக
இனையவன்றருநூ லினிமைநோக்கித்
தனைநிக ரிராமலிங் காரியன்றாண்மலர்
பத்திசெய்குநர் பயின்றருள் சார்ந்திட
மாநிலம்புகழ மண்ணூர்ப்பேட்டை
தானிடமாக்கிய சற்சனர் புகழும்
உத்தமன் தமிழ்நூ லுவப்பொடு கற்பவன்
வர்த்தகச்சிறப்பின் வைசியவணிகர்
தங்குலத்திலகன் பெங்களுரென்னும்
மங்களாகரமா மன்னுகல்யாண
புரத்தினில்வாழ்க்கை தரித்தவனப்பா
சாமிவேளன்பாற் றோமிலாவச்சிற்
பத்திது நறுந்தமிழ்ப் பாருளோரெவரும்
மதிக்கவழங்கினன் மாரிபோல்பவனே.

--------------------------------

இஃது
அருட்பெருஞ்சோதியாண்டவர் அடியார்க்கடியராகிய
பெங்களூர்
நாராயணசாமி செட்டியார் இயற்றிய,

வெண்பா.

வித்துவ சிகாமணியாம் வேங்கடசுப் பேந்த்ரனருட்
சித்த னிராமலிங்க தேசிகன்மேற் - சித்தமிகு
மன்பாற் பதிற்றுப்பத் தந்தாதி பாடினான்
இன்பா லதுகற்கண்டே.

-----------------------------------

Saturday, October 14, 2017

"திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -

நூல் அறிமுகம்:
திருஅருட்பிராகாச வள்ளல் பெருமான் நம்மை உய்விக்க வந்த அருளாளர், அவர் தம் சீடர்கள் அனைவரும் அவரின் பெருமையை முற்றும் நன்கு உணர்ந்தவர்களே, அவர்கள் உணர்ந்த விதத்தையும், பெருமானார் தம்மை ஆண்டுகொண்ட அருளினையும், வள்ளலாரின் பெருமைகளையும் "தமிழ்பாக்களாகவும், தோத்திரங்களாகவும், நூல்களாவும் வெளியீட்டு" அந்நூல்களுக்கு "பெருமானாரின் திருப்பெயரைச் சூட்டி வழங்கியுள்ளனர். எளியவனுக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் தோன்றிய அருளாளர் ஒருவருக்கு அவர்களின் மாணவர்களால் எண்ணிலடங்கா தோத்திரங்கள் எழுதப்பட்டது என்றால் அது வள்ளல் பெருமான் ஒருவருக்கேயாம்.

அந்த வகையில் வள்ளல் பெருமானின் மாணவர்களுள் ஒருவரும், திருஅருட்பாவிற்கு உரை எழுதத்தொடங்கி முதல் திருமுறை முழுவதும் உரை கண்டவரும், தமிழ் அறிஞருமான "'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" வள்ளல் பெருமான் மீது "திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" என்னும் நூலினை தோத்தரித்து, வள்ளல் பெருமானின் அன்பராகிய "பெங்களூரில் வணிகர் குலதிலகம்" ம. அப்பாசாமி செட்டியார் அவர்களின் உதவியால் 1902 ஆம் ஆண்டு இந்நூலினை "பெங்களூர் நேஷனல் அச்சியந்திரசாலையில்" பதிப்பித்தார்கள்.

நூலின் அமைப்பு:

பதிற்றுப்பத்து என்னும் நூல் அமைப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. அரசனுக்குப் பத்துப் பாடல் என்று 10 சேர அரசர்கள்மீது பாடப்பட்ட நூல் சங்க இலக்கிய பதிற்றுப்பத்து ஆகும், அந்த முறையில் "திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" 100 பாடல்களைக் கொண்டுள்ளது, இன்னூறு பாடல்களும் வள்ளல் பெருமானின் சிறப்பினை மெய்ஞானத் தேன் என எடுத்து இயம்புகின்றது,

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள் மஹாவித்துவான் ஆகையால் பதிற்றுப்பத்துடன் அந்தாதி செய்யுள் (ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ, தொடரோ அடுத்தப் பாடலின் தொடக்கத்தில் வரும்படிப் பாடுவது அந்தாதி)முறையையும் இணைத்து மெய்ஞானத் தமிழில் தம் குருநாதர் மீதுபாடல்களை தோத்திரமாக சாற்றியுள்ளார். இப்பாடல்கள் உள்ளபடியே உள்ளத்தினை உருவக்குவதாயும் வள்ளல் பெருமானின் திருவடிக்கண் அன்பினை நமக்கு அதிகரிக்கச் செய்வதாயும், மிக எளிமையாகவும் அமைந்துள்ளது.

இன்னூல் நமக்கு கிடைத்த செய்தி:

தொழுவூர் வேலாயுதமுதலியாரின் மகன் செங்கல்வராய முதலியாரின் வழித்தோன்றலும் (பெயர்த்தி), பெங்களூர் சீராமபுரம் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியருமான திருமதி. அருளாம்பிகை அம்மையார் அவர்கள் சன்மார்க்க சான்றோர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி தம் பாட்டனார் மற்றும் தந்தையார் ஆகியோர் சேர்த்துவைத்திருந்த சன்மார்க்க நூல்களை பெங்களூரு சன்மார்க்க சங்கத்தின் மூலமாக "வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின்" இயக்குனரும் மேனாள் தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனருமான முனைவர் இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்களிடம் வழங்கினார்கள்,

வள்ளல் பெருமானின் சீடர்கள் பெருமான் மீது இயற்றிய பாடல்களை தொகுக்கும் எனது(ஆனந்தபாரதி) முயற்சியை அறிந்த இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்கள் இன்னூலினையும் அப்பணியில் சேர்த்துக்கொள்ளப்பணித்தார்கள், அன்னாருக்கு, அம்மையாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன், இதுபோல நூல்கள் தங்களிடம் இருப்பின் இத்தொகுப்பிற்க்கு தந்து உதவும் படியும் அன்போடு வேண்டுகின்றேன்.

(வள்ளல் பெருமான் மாணவர்கள் வள்ளலார் மீது பாடியபாடல் தொகுப்புகளை இன்றுவரை தொகுத்தவை அனைத்தினையும் vallalarpootri.blogspot.com என்ற இணைய முகவரியில் காணலாம்)

அன்பர்களின் வசதிக்காக இன்னூலின் படக்கோப்புவடிவம் (PDF) இங்கு வெளியிடப்படுகின்றது,

பதிவிறக்க இணைப்பு : http://www.vallalarspace.org/AnandhaBharathi/c/V000026699B

 இன்னூலினை கணினி மயமாக்க தட்டச்சுசெய்து உதவியவர்கள், தயவுத்திரு. ஹரிஹரன், தயவுத்திரு. ஆனந்தபாரதி. 

இவ்வரிய நூலினை வள்ளல் பெருமானின் அன்பர் ஓதியும் உணர்ந்தும், பிறருக்கு பரிந்துரைத்தும் உய்வார்களாக.

நன்றி 

Monday, October 2, 2017

திருவருட் பிரகாசனார் சந்நிதி முறை வாழ்த்து

13. வாழ்த்துத் திருவிருத்தம்

திருவிருந்திடு தெய்வத் தாமரை செய்ய
உருவிருந்திடும் பதமல ருவப்பினென் றலைக்கே
பெருவிருந்திடும் அருட்பிர காசனார் பெருஞ்சீர்
வருவிருந்திடும் வாயதே வாழிநீ டூழி.

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

-----------------------

14. வாழ்த்துத் தனி நேரிசை வெண்பா

ஆரியனார் சீர்பாதந் தாங்க அமைசிரமும்
ஆரியனார் சீர்பாட வாநாவும் - ஆரியனார்
செம்மொழியே சிந்திக்கு நெஞ்சுந் தருந்தவமே
எம்மையினும் வாழ்க இனிது.

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை


திருவருட் பிரகாசனார் சந்நிதி முறை முதற்பகுதி முற்றும்.

--------------------

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "மங்கள் வாழ்த்து"

12. மங்கள் வாழ்த்து

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

புளின மாமாது பங்கினன் பொருவில்சூ ராடு கண்டகன்
புதல்வ னேயாக வந்துறும் புனிதபா லாய மங்களம்
களிசெய் காமாதி யந்தகன் கழியபா தார விந்தமுன்
கருணை யானேநி மிர்த்திடுங் கனகவா காய மங்களம்
விளிவி லாலால சுந்தரன் விரைவினா சார முன்றரும்
விடமு மேனாள்வி ருந்ததின் மிகைகிரீ வாய மங்களம்
நளின மீதேயி யந்தவ னளினமா தாவி யுந்தொழும்
நலப தாராம லிங்கவென் னடநபா தாய மங்களம் (1)

தகவி லாதேனை யுங்கொளுந் தருணமீ தாக வந்துதன்
சரண வாரீச முந்தருந் தயவினாய்ராம லிங்கவென்(று)
உகலி லோர்நாம மும்புனைந்து உவமையாதேனு மின்றியங்கு
ஒருவ னாபாச நெஞ்சக மொருவிலா யோக மிங்குறுஞ்
சுகசொ ரூபாய மங்களஞ் சுருதியா தார மங்களம்
துதிசெய் வார்பால மங்களம் சொலவொணா சோதி மங்களம்
நகமி னாதாய மங்களம் நடவினே தாய மங்களம்
நடந ராசாய மங்களம் நடநபா தாய மங்களம். (2)

பரம போதாய மங்களம் பவதி லோலாய மங்களம்
பவள ரூபாய மங்களம் பசுவினே றாய மங்களம்
சரப கோலாய மங்களம் சகலமா லாய துன்புறும்
சரச சீலாய மங்களம் சகுண லீலாய மங்களம்
வரப்ர தாபாய மங்களம் மதில்கள்கோ பாய மங்களம்
மயலு லோபாய மங்களம் மகவிலா பாய மங்களம்
நரனெ னாராம லிங்கனென்(று)ஒருபொன் ஆம்நாம வங்கிதர்
அணியெ னாளாவு வந்திடும் நடநபா தாய மங்களம். (3)

சகமி லாசாய வம்பர மதனி லாசாய லென்றிடும்
தனிவி லாசா யமங்களம் சபையு லாசாய மங்களம்
சுகசு ரேசாய மங்களம் துயர்வி தேசாய மங்களம்
சுகுண வாசாய மங்களம் துரிய தேசாய மங்களம்
மகவின சாய மங்களம் மதுர வாசார மங்கலை
மகிண நேசாய மங்களம் மதிளி னாசாய சிந்திடும்
நகவி னாணாமு கஞ்சர மரியுமோர் சார்ப தென்றிடு
  நடலை யாய்ராம லிங்கவென் னடந பாதாய மங்களம்.    (4)

சகல வேதாக மங்களும் தலைமை நாடாவ ணங்கிடும்
சமர சாசார விங்கிதம் தழவு மேலாய சங்கநின்று
அகில நோனாமை யுய்ந்திட வருளுவா னாக மொன்றணிந்து
அமல மா நாடகஞ் செயும் அமுதகோ லாய மங்களம்
இகல றாதாம தங்களென் பவையெ லாமோவி யம்புவி
இனிய சீபாத பங்கயம் இயையு சாவாமை யொன்றுற
நகலி லாவாழ்வு வந்தரு ணகமினா தாய மங்களம்
நடந ராசாய மங்களம் நடந ராசாய மங்களம்.     (5)

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

----------------------

Friday, August 18, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "திருக்கழற் சந்நிதி விண்ணப்பம்"

11. திருக்கழற் சந்நிதி விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

கொடிக்குக்காய் கனங்கொலெனுங் கோலவருண் மொழியும்
குணம்பெறவீங் கிவன்பாலி ரக்கம்வர விலைவெம்
மிடிக்கொருமா மருந்தாம் பொன் னம்பலத்தி னருளால்
விளங்குநடங் காணாத வேற்றுமையா னென்றங்
கடுத்தருளிச் செய்தவரு ளப்பாடும் ஆங்கே
யமலஅருட் கரத்தாலே கைபிடித்த வாறும்
தடித்தமனச் சிற்றேழை யறிகிலேன் அரசே
தவிக்கவிடேல் ஏன்றுகொலாய் சற்குருமா மணியே. (1)

ஆண்டநாள் அஞ்சலென்ற அருட்டிறமும் ஆங்கே
அருண்மொழிமேல் ஒருமொழியின் றெனக்கருளு திறனும்
பாங்குறப்பின் ஆங்காங்கே பருவரல்க ளுறுங்கால்
பரிந்தவரு ளுளப்பாடும் பாவியனை ஈங்கு
வீம்பறவென் மடப்பிள்ளாய் அவதரித்தாய் என்ன
விளம்பியதும் காலனுனை யணுகலிலை யென்ன
வோம்படுத்துச் சொன்னதொரு மொழியும் உண்மை
யுணர்கில்லே னுடையானே கடையேனுக் கிரங்கே. (2)

அன்றொருபுன் கனவினிடை யருளாலே வந்தென்
ஆதரவு னேக்காவாங் குறாவரையென் னுரைக்கும்
நன்றுபொருண் மொழிந்தனை நாடாமே மறந்த
நவைநோக்கா துடையானே! நனவினுநன் கருளி
வென்றிபெறக் கருணைசெய்யும் வேதியனே! துரையே!
வியலுமருட் பிரகாச மேதக்க மணியே!
நின்றுலகம் ஒருமூன்றும் ஏத்தமணி மன்றம்
நின்றவனே குன்றவில்லி நீள்கருணைக் கடலே! (3)

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

-----------------------

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "அற்பித்த விண்ணப்பம்"

10. அற்பித்த விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

தண்ணார் கொன்றையினாய் தமிழ் மெய்ப்பய னானவனே
அண்ணா வாருயிரே அணி மன்றவ ஆரழல்போல்
வண்ணா வானமுதே வட லூருறை மாணிக்கமே
எண்ணா யேழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (1)

சேலா டும்விழியா ளவள் செய்தவங் காணவன்று
நூலார் மார்பினனாய் நுணு கும்நடை கொண்டவனே
மாலோ டயனறியா வட லூருறை மாணிக்கமே
ஏலாய் ஏழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (2)

கந்தா கற்பகமே கடை யேனிரு கண்மணியே
நந்தா மணிவிளக்கே நாயி னேனைப்பொ ருட்படுத்து
வந்தாய் மானிடனாய் வட லூருறை மாணிக்கமே
எந்தாய் குற்றமெண்ணேல் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (3)

தாயே தத்துவனே தந்தை யேயெந் தயாநிதியே
சேயே செழுந்துணையே சிவ னேசிவ லோகத்தனே
மாயா மாயம்வல்லாய் வட லூருறை மாணிக்கமே
ஏயே ஏழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (4)

குருவே கோமளமார் கொடி யேரிடைக் கொம்பனையாள்
திருவே தெள்ளமிழ்தே சிறி யேனுளச் செய்யமலர்
மருவே மன்றுடையாய் வட லூருறை மாணிக்கமே
யிருவே றெண்ணலெந்தா யெம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (5)

கொடியே னெஞ்சகமே கோயில் கொண்ட குருமணியே
படிமே லொன் றுமிலாப் பாவி யேனைப் பொருட்படுத்து
வடிவோர் மானிடனாம் வட லூருறை மாணிக்கமே
அடிகேள் குற்றமெண்ணேல் அம்மா னென்னை ஏன்றுகொள்ளே. (6)

ஊழ்மா முளையமுதம் உண்ட வெம்முடை உத்தமனே
பாழ்மா மையலுறா வகை யிற்பரிந் தாண்டுகொண்ட
வாழ்வே மாமணியே வட லூருறை மாணிக்கமே
ஏழா யென்னவெள்ளேல் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (7)

ஊனாய் உயிரானாய் ஒளிர் ஞாயிறு தண்மதியம்
வானாய் தீநிலனீர் வளி யான மரகதமே
மானார் கண்ணிபங்கா வட லூருறை மாணிக்கமே
ஆனா ஆரமுதே யடி யேனையும் ஏன்றுகொள்ளே. (8)

ஆல நறுநிழலும் அணி தண்குருந் தின்னிழலும்
போலவென் புன்றலைமேற் புனை வித்தபொ லங்கழலாய்
மாலவோர் மானிடனாம் வட லூருறை மாணிக்கமே
யேலக் குழலிபங்கா வெம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (9)

போதே போக்குகின்றேன் அவமேவெறும் புன்மைகளால்
ஏதே செயக்கடவேன் இனி யேதுவிலே னுயுமா
வாதே துள்ளுளவென் வட லூருறை மாணிக்கமே
யீதோ கருணையெந்தாய் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (10)


அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "குறையிரந்த விண்ணப்பம்"

9. குறையிரந்த விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

அப்பா ஆரமுதே அழ காவணி அம்பலத்துள்
செப்பார் கொங்கையொடு நட மாடிய சேவகனே
மைப்பா வியகண்டத்தாய் வட லூருறை மாமருந்தே
யிப்பார் தன்னிடையே எனை யென்செய எண்ணினையே (1)

அன்னே ஆருயிரேஅணி யம்பலத் தாரழகா
கொன்னே நாள்கழித்தேன் கொடுங் கூற்றுயிர் கொள்ளைகொள்ள
மன்னே மாதவமே வட லூருறை மாமருந்தே
என்னே திருவுளந்தான் எனை யென்செய எண்ணினையே (2)

அணியே ஆரழகா வரு ளம்பலத் தென்னரசே
பிணியேன் நினையமாட்டேன் வுன பெய்கழல் பேய்மதியால்
மணியே மாநிதியே வடலூருறை மாமருந்தே
எணியே நைதல் செய்வேன் எனை யென்செய எண்ணினையே(3) 

அய்யா ஆரழகா அடி யார்தம் மனத்தவனே
பொய்யா னபலவும் புரிந் தேயவம் போக்குகின்றேன்
மையார் கண்ணிபங்கா வடலூருறை மாமருந்தே
எய்யா வாறுரையாய் எனை யென்செய எண்ணினையே (4)

ஆனிடத் தஞ்சுமாடும் அணி யம்பலத் தாரழகா
ஊனிடத் தாசைவைத்தேன் உனை யோதல்நினைத்தல் செய்யேன்
மானிடக் கோலங்கொண்டாய் வட லூருறை மாமருந்தே
ஏனிடர்ப் பாடுவைத்தாய் எனை யென்செய எண்ணினையே.  (5)

அஞ்சலென் றாண்டவனே அம் பலந்திகழ்செம்பொற்குன்றே
பஞ்சடிப் பாவை நல்லாளுடை னாடிய பண்டங்கனே
மஞ்சணி பொன்மிடற்றாய் வட லூறை மாமருந்தே
எஞ்சலி லாதவனே எனை யென்செய எண்ணினையே  (6)

அன்றயன் மாலறியாஅடி யேன்றலைக் கேமுடியா
நன்றணிந் திட்டவனே பொது வாடிய நம்பரனே
வன்றுயர் நீக்கவல்லாய் வட லூருறை மாமருந்தே
என்றனி ஆருயிரே எனை யென்செய எண்ணினையே   (7)

அரியவ னேயரசே அணி யம்பலத் தாரமுதே
தெரிகிலன் நின்னையின்னம் செறி யுந்நெறி தேவதேவே
வரியர வார்த்தவனே வட லூருறை மாமருந்தே
இருவினை வல்லிபூண்ட எனை யென்செய எண்ணினையே   (8)

அரனே யம்பலவா வழ லாடிய வாரமுதே
மரனேர் வன்கணன் கல் மனமோவுரு காவலிது
வரனேர் மங்கைபங்கா வட லூருறை மாமருந்தே
இரவேன் உன்னையெந்தாய் எனை யென்செய எண்ணினையே(9)

அற்றவர்க் கற்றவனே அழ காவம்பலத் தாடல் செய்வாய்
குற்றமெலாம்படிகொள் கொடியேனிற்குறித்துக்கொள்ளேல்
மற்றுங்கொட விருந்தேன் வட லூறை மாமருந்தே
எற்றினி விண்ணப்பிப்பேன் எனையென்செய எண்ணினையே    (10)

ஆதனை ஆளுடையாய் அம் பலந்திகழ் ஆரமுதே
ஓதலி னியவனே ஒற்றி யூருறை உத்தமனே
மாதிடங் கொண்டபிரான் வட லூருறை மாமருந்தே
ஏதினிச் செய்யவல்லேன் எனை யென்செய எண்ணினையே      (11)

   
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

Sunday, August 13, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "முறையீட்டு விண்ணப்பம்"

8. முறையீட்டு விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

விடையத் தழ்த்தீ ருய்யும் படிக்கு வீடுஞ் காட்டில்லீர்
அடைய வென்னை யவலப் படுத்த லழகோ வருட்கையா
கடல்சூழ் வையம் பரவப் படுவீர் கண்ணே களைகண்ணே
வடலூ ரொடுமென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே(1)

அறவும் விடுக்கீ ருறநல் லருளுட் புகுத லதுவொட்டீர்
அறமுன் சொன்னீர் ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கறவை புனிற்றோ டுலவும் வடலூர் கண்ணே களைகண்ணே
மறமன் னியவென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்து போதிரே (2)

உமக்காட் படுத்தீ ரிடையே கள்ள வினையுற் றாளவே
அமைவுற் றிருந்தீ ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கமச்சூன் முகில்சேர் பொழில்சூழ் வடலூர்கண்ணே களைகண்ணே
மமதை உறுமென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே   (3)

கெடவே யுலக நடையிற் செலுத்தீர் கேடில் பதந்தாரீர்
அடைபே ரருளீ ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கடனஞ் சுண்டீர் வானோர் உய்யக் கண்ணே களைகண்ணே
வடலுங் கொடியே னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே   (4)

நினையா திருக்க வொட்டீர் நீரா யுருக்கி யுயக்கொள்ளீ
ரணைமெ வியநீ ரின்ன மவலப் படுத்த லழகேயோ
கனைவா னுரிஞ்சும் பொழில்சூழ் வடலூர் கண்ணே களைகண்ணே
வனையா நெஞ்ச மிடங்கொண் டிருந்தீர் வாழ்ந்துபோதீரே   (5)

தாழ்வே படுத்தித் தாழ்ந்தாற் பொறுக்கா தெடுத்தீ ரெடுத்தாங்கே
ஆள்வா னிசையீரின்ன மவலப் படுத்த லழகேயோ
காழ்மா மரஞ்சூழ் வடலூ ரிருந்த கண்ணே களைகண்ணே
வாழ்வா னருளீர் வாளாங் கிருந்தீர் வாழ்ந்து போதிரே.          (6)

விணே யடிமை யெனப்பேர் பட்டேன் மெய்ம்மை நெறிகாணேன்
ஆணாய்ப் பிறந்திவ் வவல முழந்தேனழகோ வருட்கையா
காணீர் போலு மென்னோய் வடலூர் கண்ணே களைகண்ணே
மாணா வென்னெஞ் சிடங்கொண் டிருந்தீர் வாழ்ந்துபோதிரே.

கெட்டா லவமே நானே நீரே பழிபட் டீராளப்
பட்டே யொழிந்தே னின்ன மவலப் படவே படுமேயோ
கட்டார் புனல்சூழ் வேலி வடலூர்க் கண்ணே களைகண்ணே
மட்டா கரவென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே   (7)

பிறர்தந் திரமொன் றெண்ணேன் பிறிதுமதியேன் பொருளாக
அறமன் னியசே வடியல் லானா னவலப் படுவேனோ
கறுவில் கருணைக் கடலே புலியூர்க் கண்ணே களைகண்ணே
மறுவில் வடலு நெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்து போதிரே.    (8)

மறந்தான் மறக்கப் படுமோ வுமைநான் வடலூர் வாழ்ந்துள்ளீர்
அறந்தா னுரைத்தீ ரால நிழலி லவலங் களையீரோ
கறந்தான் கன்றோ டுலவு மொற்றிக் கண்ணே களைகண்ணே
மறந்தாழ் நெஞ்சில் வாளாங் கிருந்தால் வாழ்ந்துபோதீரே   (9)

எதுநான் செய்கேன் யாரே களைகண்ணெனைமுன் னாட்கொண்டீர்
புதுமா முகப்பே லுயுமா றுளதோ வவலம் புகுவேனே
கதுவா தொன்னுள் ளமர்ந்தீர் தணிகைக் கண்ணே களைகண்ணே
மதுவார் பொழில்சூழ் வடலூ ரிருந்தீர் வாழ்ந்து போதீரே.    (10)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை